Begin typing your search above and press return to search.
இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலைவரான ஜக்தீப் தன்கர் பற்றிய தகவல்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
HIGHLIGHTS
இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்தீப் தன்கர் பற்றிய தகவல்கள் உங்களுக்காக
- ஜாட் இனத்தைச் சேர்ந்த ஜக்தீப் தன்கர். 1951 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமமான கிதானாவில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தார்.
- தன்கர் ஒரு வழக்கறிஞராகத் தொடங்கி உச்ச நீதிமன்றம் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களில் பயிற்சி செய்துள்ளார். அவர் தீவிர அரசியலில் நுழைந்த ஒரு வருடம் கழித்து, 1990 இல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
- இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதம மந்திரி சவுத்ரி தேவி லாலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், வி.பி. சிங் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, 1990 இல் சந்திர சேகர் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தில் மத்திய அமைச்சரானார்.
- பிவி நரசிம்மராவ் பிரதமரானபோது காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் ராஜஸ்தானில் அசோக் கெலாட் செல்வாக்கு பெற்றதால், அவர் பாஜகவுக்கு மாறினார்.
- 2019 ஜூலையில் மேற்கு வங்க ஆளுநராக தன்கர் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 6, 2022 அன்று, எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தன்கர் இந்தியாவின் குடியரசு துணைத்தளைவரானார்.