/* */

திருப்பதி கோயில் செல்வோர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது

சொர்க்கவாசல் தரிசனத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்வோர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

HIGHLIGHTS

திருப்பதி கோயில் செல்வோர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
X

 திருமலை கோவில் - கோப்புப்படம் 

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிசம்பா் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாள்களுக்கு பக்தா்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதையொட்டி, டிசம்பா் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 24-ஆம் தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வைகுண்ட வாயில் 10 நாள்கள் தரிசனத்தை முன்னிட்டு டிசம்பா் 22 முதல் 24, டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1 வரை ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சகஸ்ர தீபாலங்கார சேவை பக்தா்களின்றி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் நேரில் வரும் விவிஐபிக்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான வி ஐ பி பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாள்கள் வரை வி ஐ பி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் தீர்ந்தன. இதனால், ஜன. 1 ஆம் தேதி வரை ஏழுமலையானை வழிபடுவதற்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் அனைத்தும் தீர்ந்தன.

எனவே திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் ரூ. 300 தரிசன டிக்கெட்கள் இல்லாமல் ஜனவரி 1 ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 2 Jan 2024 10:22 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!