/* */

உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்

போர் நடந்து வருவதால் மாணவர் உடலை கொண்டு வருவது சிரமம் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்
X

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா. இவர் உக்ரைனில் படித்து வந்தார். ரஷ்யா ஊக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் கார்கீவ் நகரில் உள்ளவர்கள் வெளியே வர முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் இன்று மாணவர் நவீன் சேகரப்பா 2வது பெரிய நகரமான கார்கிவ் நகர் ரயில் நிலையம் செல்ல முயன்றார். அப்போது ரஷ்ய ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் பலர் உயரிழந்தனர். இதில் நவீன் சேகரப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம் என்றும், தகுந்த சூழல் வரும்போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

Updated On: 1 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...