/* */

உலகம் போற்றும் உன்னத இலக்கியம் திருக்குறள்..!

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்து முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

உலகம் போற்றும் உன்னத இலக்கியம் திருக்குறள்..!
X

thirukural tamil-திருக்குறள் (கோப்பு படம் )

Thirukural Tamil

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

Thirukural Tamil

இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.

வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.

சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.

இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Thirukural Tamil

திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.

இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.

அறத்துப்பால்-38 அதிகாரங்கள்

பொருட்பால்-70 அதிகாரங்கள்

காமத்துப்பால்-25 அதிகாரங்கள்

திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளதால், காலத்துக்கும் ஆசிரியரின் அறிவுக்கும் தகுந்தார் போல் இயலை மாற்றி அமைத்துள்ளனர்.

Thirukural Tamil

அறத்துப்பால்

பாயிரவியல்

இல்லறவியல்

துறவறவியல்

ஊழியல்

பொருட்பால்

அரசியல்

அமைச்சியல்

அரணியல்

கூழியல்

படையில்

நட்பியல்

குடியியல்

காமத்துப்பால்

களவியல்

கற்பியல்

திருவள்ளுவர் மூன்று காலம் உணர்ந்த ஞானி. அவரால் எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஆதலால் மூன்று காலம் உணர்ந்த வல்லுநர்கலால் மட்டுமே திருக்குறளை உணர்ந்து கொள்ள முடியும்.சாதாரண மனிதனுக்கு ஒரு பொருளும் தவத்தில் உயர்ந்த உள்ளத்துக்கு வேறு ஒரு பொருளும் தெரியும்.சிவலிங்கத்தை குழந்தைகளுக்கு(சாதாரன மனிதர்) சொல்லி தந்த விதத்திலும் , மாற்றுப்பால் மீது பற்று கொண்டவர்களால் வேறு ஒரு பொருள் அதாவது ஆண் பெண் உறுப்பு என்றும் , கடவுளை கண்ட உயர்ந்த ஞானிக்கு உயிர் வடிவமாகிய கோளத்தின்(முட்டை) வடிவமாக தோன்றும் என்று பெரியோர்களின் கூற்று.


Thirukural Tamil

காமம் என்றால் ஆண் மீது பெண்னுக்கும், பெண் மீது ஆணுக்கும் உள்ள காதல் தான் என்று தோன்றும். ஆனால் பெரியோர்கள் அதாவது தவத்தில் உயர்ந்த நிலை நோக்கிப்பயணம் செய்கிறவர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள காதல் என்றும் சொல்கிறார்கள்.

மிருகமாக பிறந்து மனிதனாக மாறுவோம், பின்பு கடவுளாக மாறுவோம். இதில் மிருகமாக அப்படியே இருந்துவிடுவோம். மனித தன்மையிலிருந்து மிருகத்தன்மையும் பின்பு தெய்வத்தன்மையும் வரலாம்.எப்படி வேண்டுமானலும் நடக்கலாம்.மிருகத்தன்மையிலிருந்து மனித தன்மைக்கும், மனித தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கும் மாறுவதற்க்கு வழி இத்திருக்குறளில் இருப்பதாக பெரியோர்களின் கூற்று.

Thirukural Tamil

அதிகாரம் ஒவ்வொன்றும் அனுபவத்தின் சொத்து. கடவுளை நோக்கி பயணம் செய்தால் குறளில் உள்ள பொருளின் சூட்சுமம் புரியும்.தமிழின் அறிவு, இயற்கை அறிவு மற்றும் தவத்தினால் வரும் அநுபவம் சேரும் பொழுது திருக்குறள் தன் சூட்சுமத்தை வெளிப்படுத்திவிடும்.

Updated On: 22 March 2024 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!