/* */

தமிழகம் வளர்த்த தன்னிகரில்லா தலைவர், காமராஜர்..!

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் முதன்மையானவர் யார் என்று கேள்வி எழுந்தால் எல்லோருக்கும் முதலில் தோன்றும் பெயர் காமராஜர் தான்.

HIGHLIGHTS

தமிழகம் வளர்த்த தன்னிகரில்லா தலைவர், காமராஜர்..!
X

kamarajar speech-கல்விக்கண் திறந்த காமராஜர் 

Kamarajar Speech

நம் தமிழகத்தை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த காமராஜர் காலம் பொற்காலம். பள்ளி குழந்தைகளுக்காக இலவசமாக மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார்.ஏழை எளிய குழந்தைகளுக்கு கழிவு கிடைக்க வழிவகை செய்தார் கல்வி கடவுள் காமராஜர். மக்கள் வறுமையில் உணவு கிடைக்காமல் பின்பற்ற போது குழந்தைகள் பள்ளிக்கூடம் வராமல் இருப்பதை உணர்ந்தவர் அவரே தானும் வறுமையில் துன்பமும் பசி கொடுமையும் அறிந்தவர் காமராஜர். அதுக்காக பள்ளியில் சத்துணவு திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். தென்னாட்டு காந்தி படிக்காத மேதை, கர்மவீரர், கல்வி கண் திறந்த காமராஜர் என பல்வேறு சிறப்பு பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்திய அரசு காமராஜர் மறைவிற்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது. இந்தியாவின் இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி இந்தியாவின் கிங்மேக்கராகப் போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு அவரின் சாதனைகளை இங்கு பார்க்கப்போகிறோம்.

Kamarajar Speech

காமராஜர் பிறப்பு:

கு.காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் இருக்கும் விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன் அவரை ராஜா என்று அழைப்பார். அதுவே அதன் பின்னர் ( காமாட்சி+ராஜா )காமராஜர் என்று அவருக்கு பெயர் வர காரணமாக அமைந்துள்ளது.

காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை:

காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகரில் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய தந்தை இறந்து விட்டார். வறுமை மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக காமராஜரால் அவர் படிப்பைத் தொடர முடியவில்லை. பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் காமராஜர் அவருடைய மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார்.

Kamarajar Speech

அரசியல் பணி:

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர். தனது 16-வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரசில் தன்னை இணைந்து கொண்டார்.

1930-ஆம் ஆண்டு சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம் நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறகு அடுத்த ஆண்டே காந்தி இரவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள் சென்னையில், “வாள் சாத்தியாகிரகத்தை தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரத்திற்குத் தலைமைத் தாங்கினார்.

Kamarajar Speech

காங்கிரஸ்:

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

1936-ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.

Kamarajar Speech

தமிழக முதல்வராக:

1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.

கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

Kamarajar Speech

கல்வி:

17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கிழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

Kamarajar Speech

தொழில்துறை:

தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்களை போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

நெய்வேலி நிலக்கரித் திட்டம்.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை.

திருச்சி பாரத் ஹெவி எலக்ரிக்கல்ஸ்.

கல்பாக்கம் அணு மின்நிலையம்.

ஊட்டி கச்சா ஃபிலம் தொழிற்சாலை.

கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை.

நீர்ப்பாசனம்:

மேட்டூர் கால்வாய்திட்டம்.

பவானி திட்டம்.

காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்.

மணிமுத்தாறு, அமராவதி, வைகை சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களையும் ஏற்படுத்தினார்.

Kamarajar Speech

காங்கிரஸ் தலைவர்:

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின் படி அக்டோபர் 2, 1963-ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.

1963 அக்டோபர் 9-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1964-ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.

1966-ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48-வது வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்.

Kamarajar Speech

இறப்பு:

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.

Updated On: 15 March 2024 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!