/* */

இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

News For School Students - தமிழகத்தில் இன்று முதல் 10,+2 தற்காலிக மதிப்பெண் சான்று பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று
X

News For School Students -தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 27ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையதளம் https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது . தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை