தங்கைப் பாசத்தில் பாடும் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?....படிங்களேன்...
sister songs in tamil தமிழ்த்திரையுலகில் தங்கை பாசத்தினை விளக்கும் வகையில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு படத்திலும் பாடல்களும் ஹிட்தான் போங்க...
HIGHLIGHTS
sister songs in tamil
sister songs in tamil
தமிழ்சினிமாவில் சென்டிமென்ட் டச் என்று சொல்வார்கள். அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களுக்கான முக்கியத்துவம் தரும் கதையமைப்புள்ள படங்கள் வெற்றியோ வெற்றி பெற்றுள்ளதை சினிமா வரலாறுகள் சொல்லும். அது மட்டுமல்லாமல் தங்கைப் பாசத்திற்காக தயாரிக்கப்பட்ட பாடல்களும் இன்றளவில் சோடை போனதில்லை என்றே சொல்லலாம்.
இயல்பாகவே தமிழ் மண்ணில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மண்ணாக நம் தமிழ் மண் இருப்பதால்தான் என்னவோ இதுபோன்ற படங்கள் வெற்றியைத் தழுவுகின்றன.சினிமாவில் அக்காலத்தி்ல்சிவாஜி நடித்த பாசமலர் திரைப்படத்தில் அவர் தங்கைக்காக பாடும் பாடல் காலத்தினால் அழியாமல் இன்று வரை பாடிக்கொண்டிருக்கிறது பட்டி தொட்டியெல்லாம். அந்த பாடல் என்ன தெரியுமா? மலர்ந்தும் மலராத .....தான்.
sister songs in tamil
sister songs in tamil
அதேபோல் பலசினிமாக்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். பல தமிழ்ப்படங்கள் உண்டு. அந்த வகையில் 1961 ம் ஆண்டில்வெளியான பாசமலர் படத்தினைத்தான் தங்கை உறவுகளை சித்தரிக்கும் படமாகவும் பாடலாகவும் விளங்கி வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதில் அண்ணனாகவும் நடிகையர் திலகம் சாவித்திரி தங்கையாகவும் நடித்திருப்பார்கள். இரண்டுமே நடிப்பில் இமயம் தான் சொல்ல வேண்டுமா? இன்று இப்படத்தினைப் பார்த்தாலும் நம்கண்கள் குளம்போல் ஆகிவிடும். அந்த அளவிற்கு தங்கை பாசத்தினை உணர்த்தும் படமாகவும் காவியமாகவும் திகழ்ந்தது.
1993 ம் ஆண்டு கிழக்குச் சீமையிலே என்றொரு தமிழ்ப் படம் வெளியானது. இப்படம் அக்காலத்தில் பீடு நடை போட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தங்கையின் பாசத்திற்கு அண்ணன் அளிக்கும் முக்கியத்துவம் இப்படத்தின் கதையம்சத்தில் ஒரு மைல் கல்லாக கருதலாம். நடிகர் விஜயகுமார் அண்ணனாகவும் நடிகை ராதிகா தங்கையாகவும் நடித்திருப்பார்கள்.
sister songs in tamil
sister songs in tamil
அதன் பின்னர் 2001 ம் ஆண்டில் வெளியான சமுத்திரம் படத்தில் மூன்று அண்ணன்கள் ஒரு தங்கை. இந்த படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ் பாரதிராஜாஆகியோர் அண்ணன்களாகவும் காவேரி தங்கையாகவும் நடித்திருப்பார்.
2033 ம் ஆண்டும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சொக்கத்தங்கம் படம் . இதில் நடிகர் விஜயகாந்த் அண்ணனாகவும் உமா தங்கையாகவும் நடித்திருப்பார்கள். 2005 ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி படத்தில் இளையதளபதி விஜய் அண்ணனாகவும், மல்லிகா தங்கையாகவும் தன் நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்கள். அதேபோல் 2008 ம் ஆ ண்டு வெளியான பழனி திரைப்படத்தில் பரத் தம்பியாகவும் அக்காவாக நடிகை குஷ்பூ நடித்திருப்பார்கள்.
sister songs in tamil
sister songs in tamil
அதன் பின்னர் இளையதளபதி விஜய் நடித்த வேலாயுதம் சினிமா கடந்த 2008 ம் ஆண்டில் வெளியானது .இதில் விஜய் அண்ணனாகவும் சரண்யா தங்கையாகவும் நடித்திருப்பார்கள்.
2015 ம் ஆண்டு வெளிவந்த வேதாளம் சினிமாவில் அஜித் அண்ணனாகவும் அவரது தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்திருப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தங்கையின்சிறப்புகளைக் குறித்துவெளிவந்த பாடல்களைப் பற்றிஇப்போது காண்போம்.
அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ....
அண்ணன் தங்கை உறவாகும் -மருதானி...
அழகான சின்னத்தேவதை.....
ஆனந்தக்குயிலின் பாட்டு....
இந்த மன்றத்தில் ஓடி வரும்....
ரத்தத்தின் ரத்தமே....
எல்லாமே என் தங்கச்சி.... என் தங்கை கல்யாணி படம்
எதையும் தாங்குவேன் அன்புக்காக....
எந்தன் பொன்வண்ணமே...
என்ன தவம் செய்துவிட்டோம்...
என்தங்கை ஆயிரத்தில் ஒருவள் என்று பூக்களும் நட்சத்திரங்களும் சொல்லும்...
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...
ஒருகொடியில் இரு மலர்கள் காஞ்சித்தலைவன்..
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய்க்
கண்ணனின் சன்னிதியில்....
கல்யாணச்சாப்பாடு போடவா...
காத்தாழம் காட்டு வழி...
கொடியில் இரண்டு மலர் உண்டு... உயிரா? மானமா?
சாமந்திப்பூப் போல சாய்ந்தாடம்மா...
சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம்...
பூப்பூவாய் புன்னகைக்கும் இவள்....
பூமழைத் துாவி வசந்தங்கள் வாழ்த்த...
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்லை...
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை...
மலர்ந்தும் மலராத...
மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்..
மானுாத்தி மந்தையிலே மாங்குட்டி பெத்த மயிலே
மண்ணைத் தொட்டு....
முத்து நகையே....
முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை விரயம் செய்து ஏன் அழுகிறாய்
தங்க நிலவே உன்னை உருக்கி....
தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி...
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்..
தண்ணீரிலே தாமரைப்பூ...
தாயின் முகமிங்கு நிழலாடுது...
திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி...
தென்பாண்டித் தமிழே....
தென்கிழக்குச் சீமையிலே செங்காத்து பூமியிலே..
தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ துாங்கு
நண்டூருது நரியூறுது....
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் துாவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்...
இவையனைத்தும் தங்கையின் பாசத்தினை அன்பினை வெளி்ப்படுத்தும் பாடல்களாக தமிழ் சினிமாவில் ஒலித்தவை. இவற்றுள் ஒரே ஒரு பாடல் மட்டும் காலத்திற்கும் இது எங்குபாடினாலும் தங்கைகளின் மனதில் அண்ணன்களை வரவழைக்கும் பாடலாக பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதோ அந்த பாடல் முழுவதுமாக உங்களுக்காக....
Malarnthum Malaratha Lyrics in Tamil :
மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
sister songs in tamil
sister songs in tamil
வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு (2)
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் (2)
மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக (2)
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா
கனவில் நினையாத
காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா (2)
கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா
அன்பே ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ