'பூ வாடலாம் - நம் பாசம் வாடாது' - மகாலட்சுமியிடம் சினிமா டயலாக் பேசிய ரவீந்தர்
Mahalakshmi Serial Actress -'மல்லிகைப்பூ வாடலாம் - நான் உன்மீது கொண்ட பாசம் என்றுமே வாடாது' என ரவீந்தர், மகாலட்சுமியிடம் காதல் வசனம் பேசிய நிகழ்ச்சி, விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பானது.
HIGHLIGHTS
Mahalakshmi Serial Actress - சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் இளம் காதல் ஜோடியை போல, ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெரிய பருத்த உடல்வாகுடன் காணப்படும் ரவீந்திரை, அழகான இளம்பெண்ணாக காட்சிதரும் மகாலட்சுமி திருமணம் செய்துகொண்டதாக, சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமரிசித்தனர். 'உண்மையான காதலுக்கு, அன்புக்கு தோற்றம் ஒரு பொருட்டே அல்ல. காதல் என்ற புனிதமான உணர்வுக்கு முன்னால், உடல் அழகு என்பது இரண்டாம்பட்சமே' என்பதை நிரூபிக்கும் வகையில், ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி திருமணம் செய்துகொண்டு, அன்பான தம்பதியாக, தங்களது மண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். அவர்கள் மண வாழ்க்கை இனிமையாக, சந்தோஷமாக இருப்பதை, அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக, வீடியோக்களாக அவ்வப்போது வெளியிட்டு, சமூக வலைதளங்களில் அவை, வைரலாகி வருகிறது. இணையத்தில் ட்ரெண்டிங் 'கப்பிள்' ஆக இருக்கும் இவர்களை வைத்து, விஜய் டிவி தன்னுடைய டிஆர்பி-யை ஏற்றுவதற்காக 'வந்தாள் மகாலட்சுமியே' என்ற என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதில் இவர்களுக்கு விதவிதமான 'டாஸ்க்'குகள் நடத்தப்பட்டு சர்ச்சைக்குரிய கேள்விகளையும் கேட்டிருக்கின்றனர். அந்த கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பதில் அளித்து, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.
சீரியல் நடிகையான மகாலட்சுமி, காசு பணம் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள காரணம், 'பணம்'தான் என்று பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாக ரவீந்தர் - மகாலட்சுமி இருவரும் காதலித்த நிலையில், அவர்களிடம் இருக்கும் புரிதலையும், இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.
இதையடுத்து ரவீந்தர் கையில் கொடுக்கப்பட்ட பொருள்களை வைத்து, மனைவி மகாலட்சுமி கவிதை சொல்ல வேண்டும் என்ற 'டாஸ்க்' கொடுக்கப்பட்டது, முதலில் ரவீந்தர் கையில் அல்வா கொடுத்ததும் 'நான் சுவைத்த இனிப்பில், மகாலட்சுமியை விட கம்மி தான் இந்த அல்வாவின் சுவை' என்று பதில் அளித்து, 90's கிட்ஸ்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து மல்லிகைப்பூ கொடுக்க, 'இந்த மல்லிகை பூ வாடலாம். ஆனால் உன் மீது நான் வைத்திருக்கும் பாசம் வாடாது' என்று சினிமா டயலாக் அடித்துவிட்டார் ரவீந்தர். இவ்வாறு ரவீந்தர்-மகாலட்சுமி இருவரும் இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பார்த்தபிறகு ரவீந்தருக்கு இப்படி அழகான மனைவியா என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர். மேலும் சிலருக்கு 'பணம் பாதாளம் வரை பாயும்', 'பணம் பத்தும் செய்யும்' போன்ற பழமொழிகள்தான், இந்த ஜோடியை பார்த்ததும் பலருக்கும் அதுதான் நினைவுக்கு வருகிறதாம். சினிமா துறையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட, மிக அழகான பெண்ணை, தோற்றப்பொலிவு இல்லாத ஆண்கள், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வது, மிக மிக சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பணம், அதிகாரம், அந்தஸ்து, ஜாதி போன்ற பல காரணங்களால், அழகற்ற பெண்ணை, ஆணை மணப்பது நடக்கிறது. கேமரா வெளிச்சத்தில், ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி மற்றவர்களுக்கு பெரிதாக தெரிகின்றனர் என்பதே உண்மை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2