பெண்ணிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்.. வலுக்கும் எதிர்ப்பு!
சரக்கு பட விழாவில் பெண்ணிடம் அத்துமீறிய கூல் சுரேஷால் அதிருப்தியடைந்த மன்சூர் அலிகான் மீடியை முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.
HIGHLIGHTS
மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய சம்பவம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
இந்த விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, "எல்லோருக்கும் மாலை போடுகிறோமே, நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா?" என்று கேட்டு அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார். இதனால் அந்த தொகுப்பாளினி கடுமையாக கோபமடைந்தார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பேச வந்த மன்சூர் அலிகான், "கூல் சுரேஷ் இப்படி செய்திருக்கக்கூடாது. அவர் செய்தது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
கூல் சுரேஷ், "நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து நானும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார். ஆனால், அந்த தொகுப்பாளினி, "நான் உங்களிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லையே" என்று பல்பு கொடுத்தார்.
உடனடியாக கூல் சுரேஷ், "மன்னித்துக்கொள் தங்கச்சி" என்று கூறினார்.
கூல் சுரேஷின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவர் போன்ற ஆட்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் அழைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கூல் சுரேஷின் செயல் அத்துமீறல்
கூல் சுரேஷின் இந்த செயல் பெண்களுக்கு எதிரான அத்துமீறலாக கருதப்படுகிறது. ஒரு பெண்ணின் உடல் மீது அவரது விருப்பமின்றி கை வைப்பது ஒரு குற்றமாகும். கூல் சுரேஷ் தனது செயலை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், அது ஒரு பெண்ணின் மீது வன்கொடுமையாகவே கருதப்படுகிறது.
இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. பெண்கள் தங்கள் உடல் மீது அவர்கள்தான் அதிகாரம் செலுத்த வேண்டும். அவர்களின் விருப்பமின்றி யாரும் அவர்களை தொடக்கூடாது.
கூல் சுரேஷின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர் போன்ற ஆட்களை இனி சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.