/* */

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் குழந்தை பெற்றதும் மருத்துவர்கள் அதிர்ச்சி

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் குழந்தை பெற்றதும் மருத்துவர்கள் அதிர்ச்சி
X

அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர், தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளார்.மாடர்னா தடுப்பூசி போட்டுள்ள அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இந் நிலையில், அந்த குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், அதன் உடலில் கொரோனவுக்கான எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து உருவான எதிர்ப்பு சக்தி, தாயின் நஞ்சுக் கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து கிடைத்திருக்க கூடும் என்கின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்படாத கர்ப்பிணி பெண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்ததும், அதன் உடலுக்கு ஆன்டிபயாடிக் கடத்தப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


Updated On: 18 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது