Begin typing your search above and press return to search.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பால் பதற்றம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதால் பதற்ற நிலை நிலவுகிறது.
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கி உள்ளதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவுகிறது. இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசின் செயலுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.