/* */

கேரளாவிலிருந்து வருபவர்கள் 'தொற்று இல்லை' சான்று இருந்தால் மட்டுமே அனுமதி

கேரளாவிலிருந்து வருபவர்கள் 'தொற்று இல்லை' சான்று இருந்தால் மட்டுமே அனுமதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கேரளாவிலிருந்து வருபவர்கள் தொற்று இல்லை சான்று இருந்தால் மட்டுமே அனுமதி
X

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்திற்கு ஆகஸ்ட் 5ந் தேதி முதல் கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்றுடன் வந்ததால் தான் அனுமதி என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் என விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் செய்யப்பட்டு உள்ள பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளி மாநில விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை விவரங்களை நேரில் பார்த்தறிந்தோம்.

லண்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் உடல் வெப்ப பரிசோதனையோடு சேர்த்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு ரூ.900 கட்டணம் பெறப்பட்டு 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

மேலும், 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவை அறிவிப்பதற்கான முயற்சி ஓரிரு நாளில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. மற்ற நாடுகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. உடல் வெப்பநிலை பரிசோதனையின்போது பச்சை நிறத்தில் இருந்தால் இயல்பானது. சிவப்பு நிறத்தில் மாறினால் உடல் வெப்பம் அதிகமாக இருக்கலாம்.

சென்னையில் மூன்று நாட்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப நிலையிலேயே தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

வரும் 5ந் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோவை, குமரி உட்பட அனைத்து கேரள எல்லைகளில் இருந்து வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்று கட்டாயமாகும். தமிழக கேரள எல்லையில் வருவாய், காவல் துறை மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் சரிபார்க்கப்பட்டு கண்கணிக்கப்படும்.

கேரளாவில் இருந்து தடுப்பூசி போட்டு 14 நாள் கழித்து வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை காட்டி தமிழகத்துள் வரலாம். இரு தவணை தடுப்பூசி செலுத்தியோருக்கு பரிசோதனை சான்று தேவை இல்லை. சான்று சரிபார்க்கப்பட்டு தமிழகத்துள் அனுமதிக்கப்படுவர். கேரளாவிலிருந்து ரயில், சொந்த வாகனத்தில் வருவோர் அனைவருக்கும் இது பொருந்தும்.

முதுகலை மருத்துவ கவுன்சிலிங் பழைய நடைமுறையிலேயே தொடர வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே 9 குறுகலான இடங்களில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அறநிலையத்துறை நடவடிக்கை மூலம் கோயில்களில் கூட்டம் கூடுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 1 Aug 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு