/* */

விழுப்புரம் அருகே கன்னிமார் சிலைகள் திருட்டு

Today Crime News in Tamil -வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 7 கன்னிமார் சிலைகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே கன்னிமார் சிலைகள் திருட்டு
X

திருடப்பட்ட கன்னிமார் சிலைகள்.

Today Crime News in Tamil -விழுப்புரம் அருகே அகரத்துமேட்டில் பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் கோவிலில் பூஜைகளை செய்து முடித்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 கன்னிமார் சிலைகள் உடைக்கப்பட்டு திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், உடனடியாக வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், குடிபோதையில் அந்த சாமி சிலைகளை உடைத்து எடுத்துச்சென்றார்களா, அல்லது வேறு கோவிலுக்கு வைப்பதற்காக இச்சிலைகளை எடுத்துச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 Sep 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!