/* */

விழுப்புரம் அருகே தனியார் ஊழியர் வீட்டில் ரூபாய் 7 லட்சம் திருட்டு

வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 7 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்றனர்

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே தனியார் ஊழியர் வீட்டில் ரூபாய் 7 லட்சம் திருட்டு
X

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் ( 30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது உறவினர் ஒருவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 10-ந் தேதியன்று தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். வீட்டில் ராஜ்குமாரின் தாய் மட்டும் இருந்துள்ளார். நகை திருட்டு இந்நிலையில் ராஜ்குமார் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொர்ணாவூர் மேல்பாதிக்கு வந்தார். அப்போது அவர் தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தாய் வெளியில் சென்றிருக்கும் சமயத்தில் யாரேனும் மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.7 லட்சமாகும். இதுகுறித்து ராஜ்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!