Begin typing your search above and press return to search.
விழுப்புரம் அருகே ஊரடங்கில் விதிகளை மீறி திறந்திருந்த பட்டு கடைகளுக்கு சீல்
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வியாபாரம் செய்து கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மூன்று துணிக்கடைகள் இயங்கி வந்தன.
இதனை அறிந்த விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் விதிகளை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தார்.