Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் திறப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கொண்ட புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் உட்பட பலர் உடனிருந்தனா்.