Begin typing your search above and press return to search.
வீட்டின் பின்புறம் புகுந்து பீரோவில் இருந்த நகை திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டின் பின்புறம் புகுந்த மர்ம நபர்கள் நகையை திருடி சென்றனர்
HIGHLIGHTS
திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் ( 31) இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோ உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகையை திருடி சென்றனர். இன்று காலை இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.