/* */

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உப்பலங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு
X

மரக்காணம் அருகே உள்ள உப்பளம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் அருகே உப்பளங்களில் உற்பத்தி உப்பு தேக்கத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது.அதனால் உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரை பகுதிகளில் உள்ள வேலை இன்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Aug 2022 4:54 AM GMT

Related News