/* */

இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு?

விழுப்புரம் மாவட்டத்தில் இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் புகார்

HIGHLIGHTS

இலவச ஆடு வழங்கியதில் முறைகேடு?
X

இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதால் விசாரணை நடத்தக் கோரி, பஞ்சமாதேவி ஊராட்சி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் பஞ்சமாதேவி ஊராட்சி மற்றும் அதற்குள்பட்ட கிராமங்களில் கடந்த பிப்ரவரி மாதம் அரசு சாா்பில் 165 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. ஆடு வழங்கப்பட்ட சில நாள்களில், கொட்டகை அமைத்து பராமரிப்பு செலவுக்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூ.2,300 வழங்குவதாக தெரிவித்தனா்.

ஆனால், இதுவரை எங்களுக்கு கொட்டகை அமைப்பதற்கான பணம் வழங்கப்படவில்லை. இது குறித்து, கிராம பொறுப்பாளா், வி.அகரம் கால்நடை மருத்துவா், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஆகியோரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. அந்தப் பணத்தில் முறைகேடு நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். உடனடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,300 நிதியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு நடைபெற்றிருந்தால் அதில் தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

Updated On: 21 April 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!