/* */

மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

மனைவியை கொல்ல முயன்றதாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் கைது. ஏற்க்கனவே இரண்டு திருமணம் செய்திருந்தது அம்பலம்.

HIGHLIGHTS

மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது
X

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் நரேஷ் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் டிட்டர் லைன் பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருமணத்தின் போது நரேஷுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும் சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நரேஷுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்தது துர்காதேவிக்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து துர்காதேவி நரேஷிடம் கேட்ட போது மேலும் ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் நீ வாழ முடியும் என மிரட்டியுள்ளன். மேலும் அவருடைய நகைகளையும் பிடுங்கி அடகு வைத்துள்ளன். தொடர்ந்து அவரின் மாமியார் லலிதா, கணவர் நரேஷ் அவரின் உறவினர் மகேஷ் ஆகிய மூன்று பேரும் துர்காதேவியை கொல்ல முயன்றதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்காதேவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வேலூர் மகளிர் காவல் துறையினர் நரேஷை பெண்கள் வன் கொடுமை சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நரேஷை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Feb 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!