/* */

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல்

பள்ளிகொண்டாவில் பறக்கும் படை வாகன சோதனையின் போது சிக்கிய 16 டன் அளவிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அவரது வழிகாட்டுதலின் பேரில் வேலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் அடங்கிய குழு மற்றும் பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் இன்று(பிப். 12) நள்ளிரவு 1 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூரில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சுமார் 16 டன் அளவிலான ரேஷன்அரிசி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினர், லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிடிபட்ட 16 டன் ரேசன் அரிசி தொரப்பாடியில் உள்ள அரசு தானியக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 12 Feb 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...