/* */

உடுமலை அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நள்ளிரவில் ஏடிஎம்., மையத்தை உடைத்து, பணம் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி
X

உடுமலையில், ஏடிஎம் மையத்தை உடைத்து, பணம் திருட முயன்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நள்ளிரவில், முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்து, இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில், தனது முகம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேமாரவை தனது லுங்கி மற்றும் அட்டை பெட்டியால் மூடி வைத்துவிட்டு, திருட முயற்சித்துள்ளார். இருப்பினும், இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. புகாரின் பேரில், உடுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 29 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!