/* */

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது
X

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்பட்ட டிஎஸ்கே, 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, மேட்டுப்பாளையம், நெசவாளர் காலனி, நெருப்பெரிச்சல் உள்ளிட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், 5 ம் தேதி வரை, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், வார்டுக்கு தலா 200 தடுப்பூசி வீதம் செலுத்தப்பட்டது. எனினும் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படமாட்டாது என, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 July 2021 1:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது