/* */

திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா

தொழில் நகரான திருப்பூருக்கு திரும்பிய 3 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா
X

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனியன் கம்பெனிகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் புறப்பட்டு சென்றனர். ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 5 ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க துவங்கி உள்ளன. இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு திருப்பூருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்களை, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து திரும்பு தொழிலாளர்களின் பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு, தொழிலாளர்களின் அடையாள அட்டை, மொபைல் எண் உள்ளிட்டவை சேகரித்துவருகின்றனர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 3 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் வருகையால் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த போதிலும், பரவல் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.

Updated On: 8 July 2021 1:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு