Begin typing your search above and press return to search.
தட்டுப்பாடு எதிரொலி: திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது
திருப்பூர் மாநகராட்சியில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
திருப்பூர் மாநகராட்சியில் 60, வார்டுகள் அமைந்துள்ளன. அதேபோல் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக உள்ளது.
துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதல் ஆர்வமில்லாமல் இருந்த மக்கள், தற்போது விழிப்புணர்வு காரணமாக ஆர்வமாக வந்து தடுப்பூசி போடுகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34, இடங்களில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
நேற்று. வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 2,ம் தவணை தடுப்பூசி மட்டும் 17, இடங்களில் போடப்பட்டன. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால், மாநகராட்சிக்குட்பட்ட 34, இடங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.