/* */

திருப்பூரில் 771 பேருக்கு கெரோனா: 7 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் 771 பேருக்கு கெரோனா: 7 பேர் பலி
X

திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகமாக பரவி வருதை தொடர்ந்து கலெக்டர் ஆபீஸில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பற்றிய சந்தேகங்கள் மற்றும் விவரங்களை 1077 அல்லது 04212971199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில், சுகாதார துறையினர் இன்று வெளியிட்ட பட்டியலில்,

திருப்பூர் மாவட்டத்தில் 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளதாகவும், 7 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தாராபுரம் பகுதியில் 30 க்கும் மேற்பட்டவர்கள்,

உடுமலை பகுதியில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 34 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 ஆயிரத்து 210 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

5179 பேர் சிகிச்சையில் உள்ளனர். 272 பேர் இதுவரை இறந்து உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல மருத்துவனைமயில் சிகிச்சைக்கு இடவசதி இல்லாமல் பொது மக்கள் அலைந்துக்கொண்டிருக்கின்றனர்.

Updated On: 14 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்