/* */

அலட்சியம் ஆபத்தை தரும்! திருப்பூர் நகரில் அதிகரிக்கும் வாகனப்போக்குவரத்து

நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. இது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

அலட்சியம் ஆபத்தை தரும்! திருப்பூர் நகரில் அதிகரிக்கும் வாகனப்போக்குவரத்து
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமிருந்த மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் ஒன்றாகும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்ததன் பலனாக, தொற்று பரவல் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தொற்று எண்ணிக்கையை மேலும் குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, தொழில் நகரான திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், சேம்பிள் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே 10, சதவீத பணியாளர்களுடன் இயங்க, தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.

மேலும், இ-பாஸ் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே நிறுவனங்களுக்கு செல்ல முடியும். அத்துடன், இவற்றை கண்காணிக்க 13, வருவாய் துறையினர் கொண்ட கண்காணிப்பு குழு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. விதியை மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், திருப்பூரில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று வழக்கத்தை விட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. குமரன் ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்வதை பார்க்கும் போது, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருப்பூரில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சிறிதும் அச்சமின்றி பொதுமக்கள் மீண்டும் நடமாடத் தொடங்கி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இன்னும் சில நாட்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீளமுடியும்; அதன் மூலம் திருப்பூர் அதன் இயல்புநிலைக்கு திரும்பும் என்பதே உண்மை.

Updated On: 9 Jun 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்