/* */

திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு கொரோனா டெஸ்ட்

திருப்பூசில், எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு கொரோனா டெஸ்ட்
X

திருப்பூர் வந்த அரசு பஸ்சில், எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய கண்டக்டருக்கு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்போது பொது போக்குவரத்து துவங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூருக்கு, 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்துள்ளது. அந்த பஸ்சின் கண்டக்டர், பயணிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கியுள்ளார். எச்சில் தொட்டு டிக்கெட் வழங்க வேண்டாம் என பயணிகள் கேட்டு கொண்டபோதும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆவேசமடைந்த பயணிகள், திருப்பூர் சுகாதாரத்துறைக்கு, பஸ் நம்பருடன் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், திருப்பூர் சுகாதாரத்துறையினர், போக்குவரத்து போலீஸார் இணைந்து, தென்னம்பாளையத்தில் பஸ் வந்தபோது, வளைத்து நிறுத்தினர்; கண்டக்டரை கீழே இறங்கச் சொல்லி, அவருக்கு பஸ் ஸ்டாப்பில் வைத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன், இனிமேல், எச்சில் தொட்டு டிக்கெட் வழங்க கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இதற்கிடையில், நடத்துனர்கள் பயண சீட்டு வழங்கும்போது எச்சில் தொட்ட வழங்க கூடாது. ஸ்பான்ச்சில் தண்ணீர் வைத்து பயன்படுத்தி பயண சீட்டு வழங்குமாறு, போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 16 July 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு