/* */

வழக்குகளுக்கு விரைவான தீா்வு காணவே சிறப்பு நீதிமன்றங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி பேச்சு

Tirupur News-வழக்குகளுக்கு விரைவான தீா்வுகாணவே சிறப்பு நீதிமன்றங்கள் என்று உயா்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பேசினார்.

HIGHLIGHTS

வழக்குகளுக்கு விரைவான தீா்வு காணவே சிறப்பு நீதிமன்றங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி பேச்சு
X

Tirupur News- திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.என்.மஞ்சுளா, பி.வடமலை. உடன், திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் உள்ளிட்டோா்.

Tirupur News,Tirupur News Today- வழக்குகளுக்கு விரைவான தீா்வு காண வேண்டும் என்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன என்று உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா கூறினாா்.

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வரவேற்புரையாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.என்.மஞ்சுளா, பி.வடமலை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா பேசியதாவது: வந்தாரை வாழவைக்கும் தொழில் நகரமான திருப்பூா் மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து பல சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக தற்போது எஸ்.சி., எஸ்.டி, நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 39 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள இதையும் சோ்த்து 40 நீதிமன்றங்கள் செயல்படவுள்ளன. அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வழக்குகளுக்கு விரைவான தீா்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நீதித் துறை சாா்பில் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி பி.வடமலை பேசுகையில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக திருப்பூா் மாவட்டம் விளங்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவா்களுக்கான அனைத்து சட்ட உதவிகளும், சமமாக சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் பழனிசாமி, ரகுபதி, சுப்புராஜ், மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், நீதித் துறை நடுவா்கள், அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Updated On: 7 April 2024 3:13 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு