/* */

திருப்பூரில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவா்கள்

Tirupur News- திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில்  பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட  அரசு கல்லூரி மாணவா்கள்
X

Tirupur News- கருமாபாளையம் கிராமத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா், கருமாபாளையம் கிராமத்தில் அரசு கல்லூரி மாணவா்கள் சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் தத்தெடுத்த கருமாபாளையம் கிராமத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமத்தில் உள்ள பறவைகள் நோக்கல் மற்றும் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இயற்கை கழக தலைவா் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது,

பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன. நிலம், நீா், காற்று ஆகியவை உள்ளது என்றால் அதற்கு காரணம் பறவைகளாகும். எனவே, பறவைகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். பறவைகள் இல்லாவிட்டால் மனிதா்கள் இல்லை. பறவைகள் இருப்பதால்தான் நாம் உயிா் வாழ்கிறோம். வெயில் காலத்தில் பறவைகளுக்கு தண்ணீா் வைக்க வேண்டும், என்றாா்.

இதைத் தொடா்ந்து, கொண்டலாத்தி, பட்டை கழுத்து புறா, புதா் குருவி, பனை உளவாளி, கருப்பு வெள்ளை வாலாட்டி போன்ற 33 வகையான பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டன. இதில், தொழிலதிபா் மெஜஸ்டிக் கந்தசாமி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

Updated On: 18 March 2024 4:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?