/* */

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பு

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பு
X

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், பாஜக. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனைப்போட்டி நிலவுகிறது. அதில், 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தங்கள் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் தகுதியான நபரா என பார்த்து வாக்களிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் ஊழல் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக வந்து சேர வேண்டும் என்பதற்காக தான் பாஜக., தனித்து போட்டியிடுகிறது.

30 சதவீத கமிஷன் என்ற முறையை மாற்றி அமைக்கவே பாஜக., தனித்து நிற்கிறது. மத்திய அரசின் 8 ஆண்டு ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக.வின் 8 மாத ஆட்சி மீது, மக்களிடம் சலிப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக., ஆட்சியில் பொங்கல் தொகுப்புவழங்கியதில் இருந்து ஊழல் நடந்து உள்ளது, என்று அண்ணாமலை பேசினார்.

Updated On: 14 Feb 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!