/* */

விசைத்தறியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தலாமே: கூட்டமைப்பு கோரிக்கை

விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

HIGHLIGHTS

விசைத்தறியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தலாமே: கூட்டமைப்பு கோரிக்கை
X

கோப்பு படம்

தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. விசைத்தறி வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முகாம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து, கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், தமிழக முதல்வர் அறிவித்துள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம் திட்டத்தில் தடுப்பூசி போட வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, எங்கள் சங்கம் மூலம் முகாம் அமைத்து அல்லது அரசு அறிவிக்கும் மருத்துவமனையில் அல்லது பொது வெளியில் ஏற்பாடு செய்து தர வேண்டும். இதன் மூலம் விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவர்; தொழில் பாதிக்காது என்றனர்.

Updated On: 1 Jun 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...