/* */

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தனியார் இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட, அனுப்பட்டி மக்கள்.

பல்லடம் அருகே அனுப்பட்டியில் செயல்பட்டு வரும், தனியார் இரும்பு உருக்கு ஆலையால், கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறி, பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்.

அப்பகுதியினர் கூறியதாவது: கடந்த, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் இரும்பு உருக்கு ஆலை அனுப்பட்டியில் செயல்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு புகையால், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றுவதில்லை. மாசு ஏற்படுவதை தடுக்க மரக்கன்றுகள் வைத்திருந்தால், இன்று அவை மரங்களாக மாறி இருக்கும்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனஜாவிடம், மக்கள் புகார் மனு வழங்கினர்.

Updated On: 30 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!