/* */

பல்லடம்; 4 பேர் கொலை வழக்கில் வரும் 15-ம் தேதி தீா்ப்பு

Tirupur News- பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் வரும் 15-ம் தேதி தீா்ப்பு வெளியாகிறது.

HIGHLIGHTS

பல்லடம்; 4 பேர் கொலை வழக்கில் வரும் 15-ம் தேதி தீா்ப்பு
X

Tirupur News- பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்த வழக்கில், வரும் 15-ம் தேதி தீா்ப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஏப்ரல் 15- ம் தேதி தீா்ப்பு வெளியாகவுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ம் தேதி மது அருந்தியவா்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (47), மோகன்ராஜ் (49), ரத்தினம்மாள் (58), புஷ்பவதி (67) ஆகிய நான்கு போ் வெட்டிக் செய்யப்பட்டனா். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடா்பாக பல்லடம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம், அரியநாகரிபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (27), அவரது தந்தை ஐயப்பன் (52), மணப்பாறையைச் சோ்ந்த செல்லமுத்து (24), தேனியைச் சோ்ந்த விஷால் (எ) சோனை முத்தையா (20), செல்வம் (25) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்கள் 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பான விசாரணை திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறு. இது தொடா்பாக 800 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் திங்கள்கிழமை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் மீதான தீா்ப்பு ஏப்ரல் 15 -ம் தேதி வெளியாகும் என்று இந்த வழக்கில் ஆஜரான திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வழக்குரைஞா் எஸ்.கனகசபாபதி தெரிவித்துள்ளாா்.

Updated On: 9 April 2024 9:53 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு