/* */

ருத்ராவதி பேரூராட்சியில் சும்மா கிடக்குது பேருந்து நிலையம்

ருத்ராவதி பேரூராட்சியில் பயனற்று கிடக்கும் பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

ருத்ராவதி பேரூராட்சியில் சும்மா கிடக்குது பேருந்து நிலையம்
X

தாராபுரம், ருத்ராவதி பேரூராட்சியில், பயனற்றுக் கிடக்கும் பேருந்து நிறுத்தம்.

தாராபுரம், ருத்ராவதி பேரூராட்சியில், பயனற்று கிடக்கும் பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ருத்ராவதி பேரூராட்சியில், கடந்த, 1999ம் ஆண்டு, 1.5 ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டு, அங்கு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. பணி முடிந்து, கடந்த 2015ம் ஆண்டு, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

இங்கு, 8 கடைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பெண்கள் பாலுாட்டும் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 6 லட்சம் ரூபாய் செலவில், 'ஐமாஸ்' விளக்கும் பொருத்தப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிறுத்தம், பயனற்று, புதர்மண்டிக் கிடக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இந்த பயணிகள் நிறுத்தத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர், பேரூராட்சி நிர்வாகத்துக்கு மனுவும் வழங்கியுள்ளனர்.

Updated On: 17 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!