Begin typing your search above and press return to search.
வஞ்சிபாளையத்தில் ரயில் நின்று செல்லுமா? ரயில்வேயிடம் கோரிக்கை மனு
வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில், முன்புபோல, பாசஞ்சர் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது, வஞ்சிபாவஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில், முன்புபோல, பாசஞ்சர் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வஞ்சிபாளையம் பகுதி பொதுமக்களின் சார்பாக, நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள், ரயில் நிலைய மேலாளரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் வஞ்சிபாளையத்தில் ரயில்கள் நின்று செல்வதற்கு, தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.