/* */

திருப்பூர் அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூர் அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு
X

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவன் ஜெகன்.

அரசு பள்ளியில் படித்த பனியன் நிறுவன டெய்லர் மகன், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் வசிப்பவர், கணேசன்; பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிகிறார். இவரது தாய், பாரதி. இவர்களது மகன் ஜெகன், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து, 'நீட்' தேர்வெழுதி, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜெகன் கூறுகையில், ''என் பெற்றோருக்கு நான் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளி உயிரியல் பாட ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பான முறையில் ஊக்குவித்தார். அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் குமரேசன் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்ல முறையில் ஊக்குவித்தால், என்னால் வெற்றி பெற முடிந்தது,'' என்றார்.

Updated On: 30 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?