/* */

புதுப்பாளையம் ஊராட்சியில் மழை பாதித்த சாலைகள் சீரமைப்பு

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டன.

HIGHLIGHTS

புதுப்பாளையம் ஊராட்சியில் மழை பாதித்த சாலைகள் சீரமைப்பு
X

காந்தி நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டது.

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், டெங்கு கொசு ஒழிப்புப்பணி, மாஸ் கிளீனிங் பணி உள்ளிட்டவை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அவ்வகையில், வஞ்சிபாளையம் காந்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால், காந்தி நகர் பகுதி சாலையில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்த தகவல் அறிந்ததும், ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

காந்தி நகர் பகுதியில், மழை நீர் தேங்கியிருந்த சாலை. அடுத்த படம்: சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், காந்தி நகர் பகுதியில் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியிருந்த பகுதிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு, ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி சாலை தற்போது மழை நீர் தேங்காதவாறு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

Updated On: 21 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!