/* */

அவினாசியில் இ–சேவை மையத்துக்குள் மழைநீர்: சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு

அவினாசி தாலுகா அலுவலகத்தில் இ–சேவை மையத்துக்குள் மழைநீர் ஒழுகியதால், கம்ப்யூட்டர் சேவை பாதிக்கப்பட்டு, பணிகள் முடங்கின.

HIGHLIGHTS

அவினாசியில் இ–சேவை மையத்துக்குள் மழைநீர்: சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு
X

அவினாசி உள்ள இ-சேவை மையத்தில், மழைநீர் புகுந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. 

அவினாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ–சேவை மையத்துக்குள் மழைநீர் ஒழுகியதால், கம்ப்யூட்டர் சேவை பாதிக்கப்பட்டு, பணிகள் முடங்கின.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அலுவலகத்தின் ஒரு அறையில், இ–சேவை மையம் செயல்படுகிறது. இங்கு ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா, சிட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், இணைய வழி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது. இரண்டு கம்ப்யூட்டர் மூலம் இப்பணி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களாக, இரவு பெய்யும் பலத்த மழையில், இ–சேவை மைய அலுவலக கட்டடத்தின் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகி, கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களுக்குள் தணணீர் புகுந்தது. கம்பயூட்டர் செயலிழந்ததால், ஊழியர்களால் பணி செய்ய முடியவில்லை. பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

'கட்டடம் பழமையானதாக இருப்பதால், கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது; பராமரிப்புப்பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது' என இ–சேவை மைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  2. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  3. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  7. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  8. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  9. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  10. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை