/* */

அவிநாசி: விதிமீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்டபனியன் நிறுவனத்தில், 47 பெண்களுக்கு கொரோனாஅ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அவிநாசி: விதிமீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா!
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பனியன் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் செயல்படாமல் உள்ளன.

இந்நிலையில், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட அணைப்புதூர் அருகே, திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் ஒன்று, விதிமுறை மீறி செயல்படுவதாக, வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு சோதனை செய்ததில், நிறுவனத்தில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அங்கு பணியாற்றிவர்களை பரிசோதனை செய்தபோது, அவர்களின் 47, பெண் தொழிலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி இயங்கிய நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை, உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 2 Jun 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  3. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  4. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  5. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  6. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  7. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  10. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...