/* */

திருப்பூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 8 கிலோ கஞ்சாவுடன், கேரளாவை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.

HIGHLIGHTS

திருப்பூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
X

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 8 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். 

கோவை போத்தனூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, தர்மராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று காலை திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற ரயில், காலை 8 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. பொதுப்பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வாலிபர் வைத்திருந்த பையில், 8 கிலோ கஞ்சா இருந்தது. உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் சாவக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நித்தின் (வயது 26) என்பதும், அவர் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, நித்தினை கைது செய்தனர்.

Updated On: 21 Aug 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை