/* */

வாணியம்பாடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய தன்னார்வலர்கள்

வாணியம்பாடியில் பொது பயன்பாட்டுக்காக இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முத்தமிழ் மன்ற அறக்கட்டளையினர் வழங்கினர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில்  ஆக்சிஜன் செறிவூட்டும்  கருவிகளை வழங்கிய தன்னார்வலர்கள்
X

வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளையினர் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, அதன் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதி வழங்குமாறு அறிவித்திருந்ததன் பேரில் பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளை தலைவர் க.சுரேஷ் அவரது சகோதரர் க.ரமேஷ் ஆகியோர் இணைந்து 2 செறிவூட்டிகளை வழங்கியுள்ளனர். இதனை வாணியம்பாடி முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவர்களிடம் பொது பயன்பாட்டுக்காக வழங்கினர்.

Updated On: 23 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு