/* */

வாணியம்பாடி கிளைசிறையில் மூன்று பேருக்கு  கொரோனா

வாணியம்பாடியில் கிளை சிறை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் என‌ மூன்று பேருக்கு  கொரோனா வைரஸ் நோய்தொற்று.

HIGHLIGHTS

வாணியம்பாடி கிளைசிறையில்   மூன்று பேருக்கு  கொரோனா
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. இதில் ஜெயில் வார்டன் ஜெயக்குமார், இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் மற்றும் தூய்மை பணியாளர் திகில்ராஜ் ஆகியோருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

அதன் பேரில் ஜெயக்குமார் கந்திலி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் காவலர் விக்னேஷ் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்

தூய்மைப் பணியாளர் திகில் ராஜ் அக்ரஹாரம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை காவலர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், கைதிகள் மற்றும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் சிறைச்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

Updated On: 11 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா