Begin typing your search above and press return to search.
ஜோலார்பேட்டை அருகே பள்ளியில் புகுந்த பாம்பு
ஜோலார்பேட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்
HIGHLIGHTS
ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர் மதியம் பள்ளிக்கு சென்று மின் கணக்கிடும் பணியில் ஈடுபட்டபோது தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் தண்ணீர் தொட்டியில் இருந்த பாம்பை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.