/* */

ஏலகிரிமலையில் ஓடும் காரில் தீ; 3 பேர் உயிர் தப்பினர்

ஏலகிரிமலையில் திடீரென கார் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

ஏலகிரிமலையில் ஓடும் காரில் தீ;  3 பேர் உயிர் தப்பினர்
X

தீப்பற்றி எரிந்த கார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமத் இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் ஏலகிரிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, மலைச் சாலையின் 9 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென காரின் முன் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்தி பார்த்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், காரில் இருந்த அனைவரும் பத்திரமாக இறக்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டன. தகவலின் பேரில், திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 July 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...