Begin typing your search above and press return to search.
நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை..
HIGHLIGHTS
திருப்பத்தூரில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்டார வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் குப்பம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல ரயில் தண்டவாளங்கள் அருகே அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..