/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி
X

திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்றிரவு எடுத்துச் செல்லப்பட்டன.

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பிறகு பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. மேலும் வாக்காளர்களின் விவரங்கள் குறிக்கப்பட்ட படிவங்களும் மூடி கவரிடப்பட்டன. சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 3319 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2506 கட்டுப்பாடு எந்திரங்கள் 2653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வைத்து எண்ணப்பட உள்ளன. எனவே அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 7 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்