/* */

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

காெரோனா விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். இன்று மாலைக்குள் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க கூடிய அனைத்து நிறுவனங்களை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்தகாரர் என பல்வேறு துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு கட்டுபாட்டை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுபாட்டின் படி செயல்படுவது தொடர்பாக அதிகாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்தகாரர்கள் என பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கொரோனா விதிமுறைகளை அனைத்து துறையினரும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும், விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருமண மண்டபங்களில் 100 பேருக்கு மிகாமல் நிகழ்வுகள் நடத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொது தொடர்பு அதிகமுள்ள வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், திரையரங்குகள் போன்றவைகளில் உள்ள அனைத்து பணியாளர்களும் இன்று மாலைக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஊரடங்கு நெறிமுறைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையில் பண்டிகை காலங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!