முப்படை தளபதி, ராணுவ அதிகாரிகள் மறைவு: நெல்லையில் அதிமுகவினர் அஞ்சலி
முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் மறைவிற்கு நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
இந்திய தேசத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவ்த் அவர்களுடன் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இத்துயரச்சம்பவத்தில் மறைவெய்திய இராணுவ அதிகாரிகளுக்கு திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்கள்.