நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 55 மாமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
HIGHLIGHTS
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் 50 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 4 பேரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற 55 மாமன்ற உறுப்பினர்களும் இன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகம், இராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் பதவி ஏற்று கொண்டனர். மாநகராட்சி தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் 4ம் தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் 16 ஆண்டுகளுக்கு பின்பு கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் களக்காடு, அம்பாசமுத்திரம், விகேபுரம் ஆகிய 3 நகராட்சிகளிலும், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், கல்லிடைகுறிச்சி, மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், திருக்குறுங்குடி உள்ளிட்ட 17 பேருராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.