/* */

நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 55 மாமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
X

நெல்லை மாநகராட்சியில் பதவியேற்கும் உறுப்பினர்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் 50 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 4 பேரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற 55 மாமன்ற உறுப்பினர்களும் இன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகம், இராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் பதவி ஏற்று கொண்டனர். மாநகராட்சி தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் 4ம் தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் 16 ஆண்டுகளுக்கு பின்பு கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் களக்காடு, அம்பாசமுத்திரம், விகேபுரம் ஆகிய 3 நகராட்சிகளிலும், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், கல்லிடைகுறிச்சி, மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், திருக்குறுங்குடி உள்ளிட்ட 17 பேருராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

Updated On: 2 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு